செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 499 மதிப்பெண்கள்: விருதுநகர் மாணவர் சிவக்குமார் மாநிலத்தில் முதலிடம்

Published On 2016-05-25 05:20 GMT   |   Update On 2016-05-25 05:20 GMT
எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மாணவர் சிவக்குமார் முதலிடம் பெற்று உள்ளார்.

விருதுநகர்:

எஸ்.எஸ். எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் 93.5 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் விருதுநகர் மாணவர் ஆவார்.

விருதுநகர் நோபுள் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் சிவக்குமார் இந்த மதிப்பெண்களை எடுத்துள்ளார். இவர் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்.

அவரது மதிப்பெண் விவரம் வருமாறு:–

மாணவர் சிவக்குமார் கூறும்போது, அடுத்ததாக காமர்ஸ் பிரிவை தேர்வு செய்து படித்து ஆடிட்டர் ஆவதே எனது லட்சியம். எனது இந்த வெற்றிக்கு காரணம் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர். அன்றைய பாடங்களை அன்றே படிப்பதோடு புரிந்தும் படிப்பேன். இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்து படிப்பேன் என்றார்.

இதே பள்ளியை சேர்ந்த மாணவி விசுவபிரியா 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் மாநில அளவில் 2–ம் இடம் பிடித்துள்ளார்.

மாநில அளவில் மூன்றாவது இடத்தை 224 பேர் பிடித்துள்ளனர். இவர்களில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த ரச்சனா பர்வீனும் ஒருவர்.

Similar News