உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்கள்
- பைக்கில் வந்த மர்மநபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்றனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
திண்டுக்கல் பழனிரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பன் மனைவி விஜயலட்சுமி(63). இவர் தனது தாயாரை பார்க்க ஆண்டிபட்டி அருகே ரங்கசமுத்திரம் பகுதிக்கு சென்றார்.
நேருஜிகாலனிக்கு அருகில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே நடந்து சென்றபோது பைக்கில் வந்த மர்மநபர்கள் விஜயலட்சுமி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கசங்கி லியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிஓடி விட்டனர்.
அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்டும் அவர்களை பிடிக்க முடியில்லை. இதுகுறித்து வைகை அணை போலீசில் புகார்அளிக்க ப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.