search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்கள்"

    • பைக்கில் வந்த மர்மநபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்றனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    திண்டுக்கல் பழனிரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பன் மனைவி விஜயலட்சுமி(63). இவர் தனது தாயாரை பார்க்க ஆண்டிபட்டி அருகே ரங்கசமுத்திரம் பகுதிக்கு சென்றார்.

    நேருஜிகாலனிக்கு அருகில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே நடந்து சென்றபோது பைக்கில் வந்த மர்மநபர்கள் விஜயலட்சுமி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கசங்கி லியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிஓடி விட்டனர்.

    அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்டும் அவர்களை பிடிக்க முடியில்லை. இதுகுறித்து வைகை அணை போலீசில் புகார்அளிக்க ப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×