உள்ளூர் செய்திகள்
போடி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
- போடி அருகே கல்லூரி மாணவி மற்றும் மூதாட்டி ஒருவரும் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி தென்றல் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ் மகள் ரமோஷ்பிரியா(22). இவர் வீரபாண்டியில் உள்ள கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ரமோஷ்பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அன்று விடுமுறை என்பது தெரியவந்தது.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.