உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டை அருகே நோய் கொடுமையால் 2 பேர் தற்கொலை
- நிலக்கோட்டை அருகே நோய்கொடுமையால் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே மெகா சிட்டி தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 58). தச்சுத் தொழிலாளி. நோய் கொடுமையால் விஷம் குடித்து மயங்கினார்.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்தவர் பாலையா (58). கூலித் தொழிலாளி. நோய் கொடுமையால் விஷம் குடித்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து விளாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சொரூபராணி விசாரித்து வருகிறார்.