செய்திகள்
கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் சென்று வாக்கு செலுத்திய உதயநிதி ஸ்டாலின்: அதிமுக புகார்
திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுகவின் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.
திமுக-வின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திமுக-விற்கு வாக்குசேகரித்தார்.
உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் உதயசூரியன் பொறித்த சட்டையை அணிந்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது அவ்வாறு செய்தார். இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், அவருக்குரிய வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார்.
அப்போது உதயசூரியன் பொறித்த சட்டை அணிந்திருந்தார். தேர்தல் விதிமுறைப்படி அவ்வாறு செய்யக்கூடாது. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
இதனால் அதிமுக-வின் பாபு முருகவேல் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.