செய்திகள்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க முடியும்- தேர்தல் ஆணையம் கண்டிப்பு

Published On 2021-03-04 08:12 GMT   |   Update On 2021-03-04 12:49 GMT
பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளதாவது:-

* சட்டசபை தேர்தலில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம்.  

* மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

* தமிழகம் முழுவதும் மார்ச் 3-ந்தேதி வரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News