லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான பட்டாணி - காலிஃப்ளவர் குருமா

Published On 2017-08-11 07:34 GMT   |   Update On 2017-08-11 07:34 GMT
பூரி, சப்பாத்தி, புலாவ், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பட்டாணி - காலிஃப்ளவர் குருமா அருமையாக இருக்கும். இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பட்டாணி - 1 கப்
காலி ஃப்ளவர் - சிறியது 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

அரைக்க

தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
மிளகாய் - 8
சோம்பு - அரை ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 1
பிரிஞ்சி இலை - 1
கிராம்பு - 1



செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நைசாக அரைத்து கொள்ளவும்.

நறுக்கிய காலி ஃப்ளவரை உப்பு நீரில் போட்டு வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் சேர்ந்து வதங்கி வந்ததும் பட்டாணி, காலி ஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

பட்டாணி, காலி ஃப்ளவர் வெந்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான பட்டாணி - காலி ஃப்ளவர் குருமா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News