லைஃப்ஸ்டைல்
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது சாமை அரிசி. இன்று இந்த சாமை அரிசியில் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - ஒரு கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கேரட் - 1
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைகேற்ப
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை :
முதலில் கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சாமை அரிசியை நன்றாக கழுவி ஒரு கப் சாமை அரிசிக்கு, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
கேரட் நன்றாக வெந்ததும் வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து அடுப்பை 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து பரிமாறவும்.
சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.