லைஃப்ஸ்டைல்
பசியை தூண்டும் சீரக - பூண்டு குழம்பு
அஜூரண பிரச்சனை இருப்பவர்கள், பசி எடுக்காதவர்களுக்கு இந்த சீரக குழம்பை செய்து சாப்பிடலாம். இந்த குழப்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பூண்டு - 75 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - சிறிதளவு,
வெல்லம் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
புளியை கரைத்துகொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் பூண்டு, காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், வெல்லம், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் குழம்பில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான சீரக குழம்பு ரெடி.
ஒரு வாரம் வரை வைத்திருந்து இந்த குழப்பை பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.