லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான பனி வரகு பெசரெட்

Published On 2017-10-03 03:36 GMT   |   Update On 2017-10-03 03:36 GMT
தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பனி வரகு, பச்சைப்பயறை வைத்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பனி வரகு அரிசி - கால் கப்
பச்சைப்பயறு - ஒரு கப்
மிளகு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பனி வரகு அரிசி, பச்சைப்பயறை நன்றாக சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊற விடவும்.

ஊறிய பனி வரகு அரிசி, பச்சைப்பயறை மிக்சியில் போட்டு அதனுடன் மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

கரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

இதை இஞ்சி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான பனி வரகு பெசரெட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News