லைஃப்ஸ்டைல்

பனி வரகு உளுந்து பொடி சாதம்

Published On 2017-09-13 05:20 GMT   |   Update On 2017-09-13 05:20 GMT
உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று பனி வரகு, உளுந்து பொடி சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த பனி வரகு சாதம் - 2 கப்,
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு.

பொடிக்க :

முழு உளுந்து - 4 டேபிள் ஸ்பூன்,
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
கொப்பரைத் தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 8,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.



செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மிதமான தீயில் சிவக்க வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதம் கடுகு, காய்ந்தை மிளகாய், கறிவேப்பிலையை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் வடித்து வைத்த பனி வரகு சாதம், பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் நன்றாக கிளறி இறக்குங்கள்.

சூப்பரான பனி வரகு உளுந்து பொடி சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News