லைஃப்ஸ்டைல்

சோயா - தக்காளி சூப் செய்வது எப்படி

Published On 2017-06-23 05:31 GMT   |   Update On 2017-06-23 05:31 GMT
தினமும் ஏதாவது சூப் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைக்கும். இன்று சோயா, தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தக்காளி - 3,
பீட்ரூட் - 1 துண்டு
சோயா - 4 டீஸ்பூன்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - சிறிதளவு.



செய்முறை :

* சோள மாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.

* சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

* தக்காளியையும் பீட்ரூட்டையும் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் தோலுரித்து ஆறிய பின்னர் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

* அரைத்த கலவையை ஒரு கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் சோயா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* கரைத்த சோள மாவை சூப்பில் சேர்த்து கெட்டியானவுடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான சோயா - தக்காளி சூப் ரெடி.

* சூப்பை ஒரு கப்பில் ஊற்றி, அதில் வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News