லைஃப்ஸ்டைல்

சத்தான காலை டிபன் வரகரிசி உப்புமா

Published On 2017-06-13 03:31 GMT   |   Update On 2017-06-13 03:31 GMT
தினமும் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று வரகரிசி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகரிசி குருணை - 2 கப்
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
பெருங்காயத்தூள் - சிறிதளவு



செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வரகரிசி குருணையை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.

* அடுத்து அதில் பெருங்காயத்தூள், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் வரகரிசி குருணையையும் சேர்த்து 1 கப் குருணைக்கு 3 கப் தண்ணீர் வீதம் விட்டு கிளற வேண்டும்.

* நன்றாக வெந்ததும் வரும் போது உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி பரிமாற வேண்டும்.

* சத்தான வரகரிசி உப்புமா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News