லைஃப்ஸ்டைல்

வரகரிசி - பாசிப்பருப்பு மிளகுச் சாதம்

Published On 2017-05-26 03:34 GMT   |   Update On 2017-05-26 03:34 GMT
நீரிழிவு நோயாளிகளுக்கு வரகு அரிசி மிகப்பெரிய வரப்பிரசாதம். இன்று வரகரிசி, பாசிப்பருப்பு வைத்து சத்தான மிளகுச் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
மிளகு - 10 கிராம்
சீரகம் - 10 கிராம்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 கிராம்



செய்முறை :

* வரகரிசியையும். பாசிப்பருப்பையும் சேர்த்து கால் மணி நேரம் ஊறவைத்து அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

* இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயில் மிளகு, சீரகம் போட்டு கிளறுங்கள்.

* மிளகு, சீரகம் நன்கு பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு போட்டு வதக்குங்கள்.

* முந்திரிப் பருப்பு பொன்னிறமானதும் முக்கால் லிட்டர் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வரகரிசி, பருப்புக் கலவையை போட்டு 20 நிமிடங்கள் வேக விடுங்கள்.

* இறக்குவதற்கு முன்பு, நெய்யைவிட்டு கிளறி இறக்கி பரிமாறுங்கள்.

* சூப்பரான வரகரிசி - பாசிப்பருப்பு மிளகுச் சாதம் ரெடி.

* குக்கரில் வைத்தால் ஒரு விசில் விட்டு தீயை அணைத்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து திறந்து பரிமாறலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News