லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த வரகரிசி - மோர் கஞ்சி

Published On 2017-05-20 03:39 GMT   |   Update On 2017-05-20 03:39 GMT
மோர் சேர்த்து கஞ்சியாகச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் சீராகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :

வரகரிசி - கால் கப்,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - அரை கப்,
மோர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
மாங்காய், கேரட் - தலா 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவைக்கு.



செய்முறை :

* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வரகரிசியைக் கல் பொறுக்கி சுத்தம் செய்து, சிறிது ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும். விசில் போனவுடன் நன்றாக கடைந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஓமம், பச்சை மிளகாய், நறுக்கிய மாங்காய், நறுக்கிய கேரட், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு அரிசி கஞ்சி, வதக்கிய வெங்காய கலவை, மோர் சேர்த்து, நன்றாகக் கிண்டி, உப்பு, பெருங்காயத் தூள் தூவி கஞ்சியாகப் பருகவும்

* சத்து நிறைந்த வரகரிசி - மோர் கஞ்சி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News