லைஃப்ஸ்டைல்

சளி, இருமலை குணமாக்கும் ஓமம் - கற்பூரவல்லி இலை சூப்

Published On 2017-05-18 03:37 GMT   |   Update On 2017-05-18 03:38 GMT
இருமல், சளி, வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் ஓமம் - கற்பூரவல்லி இலை சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை - 10,
ஓமம் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,
மிளகு - 4 எண்ணிக்கை,
சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 4 பல்,
சோம்பு - சிறிது (தேவைப்பட்டால்),
உப்பு - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
வெற்றிலை - 4,
நெய் - 2 டீஸ்பூன்.



செய்முறை :

* கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே வைத்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் வதக்கிய பின்னர் அதில் வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடிகட்டி பருகவும்.

* ஓமம் - கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News