லைஃப்ஸ்டைல்

இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்

Published On 2017-05-11 05:35 GMT   |   Update On 2017-05-11 05:35 GMT
இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று கறிவேப்பிலை மிளகு சாதம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை - ஒரு கப் + தாளிக்க
மிளகு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு - தேவையான அளவு,



செய்முறை :

* வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.

* அடுத்து கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.

* பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.

* அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.

* அனைத்தும ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.

* வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சாதத்தை சேர்த்து, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* கறிவேப்பிலை மிளகு சாதம் ரெடி.

* இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News