லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான கொத்தமல்லி தோசை

Published On 2017-05-04 05:24 GMT   |   Update On 2017-05-04 05:24 GMT
கொத்தமல்லியில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சத்து நிறைந்த கொத்தமல்லியை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புளுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 3/4 கப்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

* கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

* புளுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தனித்தனியாக 2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஊற வைத்துள்ள அரிசிகளை கிரைண்டரில் போட்டு, அத்துடன் ஊளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் கழுவிப் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.

* அப்படி அரைக்கும் போது பாதியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான கொத்தமல்லி தோசை ரெடி..

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News