லைஃப்ஸ்டைல்

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

Published On 2017-04-19 05:13 GMT   |   Update On 2017-04-19 05:13 GMT
சத்தான கேழ்வரகை வைத்து வித்தியாசமான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று கேழ்வரகு சேமியாவை வைத்து சூப்பரான பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ராகி சேமியா - ஒரு கப்,
பச்சைப் பட்டாணி - 50 கிராம்,
பீன்ஸ் - 10
கேரட் - 1
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - சிறிதளவு
பட்டை - சிறிய துண்டு,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - ஒன்று,
பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6 பல்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
ஏலக்காய் - 2,
நல்லெண்ணெய், உப்பு -  தேவையான அளவு.



செய்முறை:

* வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சேமியாவை வெறும் கடாயில் போட்டு சிறிது வதக்கி கொள்ளவும்.

* வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

* காய்கறிகள் சற்று வதங்கியதும் இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள், உப்பு சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்).

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ராகி சேமியா பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News