லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை

Published On 2017-03-10 03:31 GMT   |   Update On 2017-03-10 03:31 GMT
பிரண்டையுடன் சிறுதானியங்களை சேர்த்து செய்யும் தோசை, சத்தான மருத்துவ குணம் நிறைந்த காலை உணவாகும். இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1/4 கப்
வரகு அரிசி - 1/4 கப்
சாமை அரிசி - 1/4 கப்
தினை அரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம்  - சிறிது
நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் - 13
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப



செய்முறை :

* வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

* கணு நீக்கிய பிரண்டையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும். நன்றாக ஆறியவுடன் நன்றாக அரைத்து  வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

* சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை ரெடி.

* பிரண்டை பசி உணர்வை தூண்டும், சிறுதானியங்கள் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News