லைஃப்ஸ்டைல்

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு - கேரட் ரொட்டி

Published On 2017-02-22 07:45 GMT   |   Update On 2017-02-22 07:45 GMT
காலை உணவிற்கு கேழ்வரகை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு, கேரட் சேர்த்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை- 1 கைப்பிடியளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஆகியவற்றை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* இந்தக் கலவையில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.

* சுவையான கேழ்வரகு கேரட் ரொட்டி தயார்  

* இது காலை உணவிற்கு உகந்த சத்தான உணவாகும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News