லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்

Published On 2017-02-14 07:28 GMT   |   Update On 2017-02-14 07:28 GMT
சிறுதானிய உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கம்பு, பருப்பு வைத்து சத்தான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கம்பரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - கால் கப்
பாசி பயிறு - கால் கப்
தண்ணீர் - 3 கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது

தாளிக்க :

எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்

பொடிக்க  :

மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - 4

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.

* குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, பருப்பு, கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் போட்டு வேகவிடவும்.

* சத்தான கம்பு பருப்பு சாதம் ரெடி.

* தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News