லைஃப்ஸ்டைல்

சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை

Published On 2016-10-06 03:41 GMT   |   Update On 2016-10-06 03:41 GMT
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கான சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி - 1/5 கப்
பாசிப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
நீர் - தேவையான அளவு

செய்முறை :


* பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்

* அரிசியை 3 மணி நேரங்கள் ஊற வைத்து நீரை வடித்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வறுத்து வைத்துள்ள பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில நீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

* கொழுக்கட்டை வெந்ததும் அதனை எடுத்து பரிமாறவும்.

* சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை ரெடி.

* இந்த கொழுக்கட்டை வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News