வழிபாடு

கமலவல்லி நாச்சியார் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு விழா

Published On 2022-07-02 04:05 GMT   |   Update On 2022-07-02 04:05 GMT
  • கமலவல்லி நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருச்சி உறையூரில் பிரசித்திபெற்ற கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான இங்கு வசந்த உற்சவம் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணி அளவில் வசந்த மண்டபம் வந்தடைந்தார்.

அங்கு அலங்காரம், அமுது செய்து கண்டருளிய பின் சாற்று மறை செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பின்னர் தாயார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Tags:    

Similar News