search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uraiyur Kamalavalli Nachiyar Temple"

    • இன்று திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு யானை மீது வெள்ளிக்குடம் வைத்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது. யானையை பின் தொடர்ந்து கோவில் பட்டர்களும் குடத்தில் புனித நீரை காலை 9.30 மணிக்கு கொண்டு வந்தனர்.

    காலை 10 மணிக்கு கமலவல்லி நாச்சியார் தாயார் அங்கில்கள், நகைகளை ஒப்படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாச்சியார் தாயாரின் ஆபரணங்கள் சுத்தம் செய்யப்பட்டு மாலை 3 மணிக்கு கோவில் ஊழியரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை.

    இன்று (சனிக்கிழமை) திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு திருமடப்பள்ளியில் இருந்து தளிகை எடுத்தலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும் நடைபெறும். காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும். காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    • சனிக்கிழமை திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறும்.
    • திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் இருந்து நாளை காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு வெள்ளிக்குடம் எடுத்துச்செல்லப்படும். காலை 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலம் புறப்படும். காலை 9.30 மணிக்கு புனிதநீர் கோவிலை வந்தடையும். காலை 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தல், அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல் பகல் 3 மணிக்கு நடைபெறும். மாலை 5 மணிக்கு மங்களஆரத்தி நடைபெறும்.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி காலை 7 மணிக்கு திருமடப்பள்ளியில் இருந்து தளிகை எடுத்தலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும் நடைபெறும். காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும். காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறுகிறது
    • 26-ந்தேதி அன்று மட்டும் வீணை வாத்தியம் கிடையாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் எனும் வசந்த உற்வசம் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர் பொதுஜன சேவை முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடாகி 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இ்ந்தநிலையில் நேற்று உள்கோடை உற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு தாயார் உள்கோடை மண்டபம் சேர்ந்தார். அங்கு 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்யப்பட்டு தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.

    இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. பின்னர் இரவு 8.45 மணிக்கு தாயார் வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார். வருகிற 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறுகிறது. 26-ந்தேதி அன்று மட்டும் வீணை வாத்தியம் கிடையாது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் என்ற வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடானார்.

    மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் வசந்த உற்சவத்தில் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவமும், வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவமும் நடைபெறும்.

    • இன்று முதல் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெறும்.
    • 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இன்று (புதன்கிழமை) முதல் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெறும்.

    இதையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடும், மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளல், இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி, இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடு, 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது.

    அதேபோல் வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும். அப்போது, மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகிறார். 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளும் தாயாருக்கு, 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீதாயார் உள்கோடை மண்டபம் சேருகிறார்.

    6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷடி, 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.45 மணிக்கு ஸ்ரீதாயார் மண்டத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருகிறார். வருகிற 26-ந்தேதி அன்று வீணை வாத்தியம் கிடையாது.

    • 6-ந்தேதி பங்குனித் தேர் திருவிழா நடக்கிறது.
    • 7-ந்தேதி ஆளும்பல்லக்கும் நடைபெற்று, விழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். உறையூர் நாச்சியார் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நாச்சியாரின் ஜென்ம நட்சத்திரமான பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உறையூர் நாச்சியாருடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு சேர்த்தி சேவையில் காட்சியளிப்பார்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டு காவிரி ஆற்றை கடந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணிக்கு உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன உபய மண்டபத்தை சென்றடைந்தார்.

    அங்கிருந்து புறப்பட்டு நாச்சியார் கோவில் முன்மண்டபத்தை பகல் 12 மணிக்கு சென்றடைந்தார். பின்னர் முன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபத்திற்கு 1.15 மணிக்கு சென்றடைந்தார். நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது.

    இந்த சேர்த்தி சேவையை காண வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சேர்த்தி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு, அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையை வந்தடைகிறார். வருகிற 5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறையே நடைபெறும் நம்பெருமாள்-ரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    6-ந்தேதி பங்குனித் தேர் திருவிழாவும், 7-ந்தேதி ஆளும்பல்லக்கும் நடைபெற்று, விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உறையூர் நாச்சியாருடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
    • 5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறையே நடைபெறும் நம்பெருமாள் -ரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனிதேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    விழாவின் 5-ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் சேஷவாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் சித்தரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 6-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவைக்காக பிற்பகல் 1.15 மணிக்கு உறையூர் நாச்சியார் கோவில் சேர்த்தி மண்டபம் சென்றடைவார்.

    108 வைணவத் திருத்தலங்களில் உறையூர் நாச்சியார் கோவில் 2-வது இடம் என்ற சிறப்புடையது. இக்கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்புக்கோவில் ஆகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் தான் உறையூர் நாச்சியார் கோவிலுக்கும் உற்சவர் ஆவார். எனவே தான் உறையூர் நாச்சியார் கோவிலில் நாச்சியாருக்கு மட்டும் தான் உற்சவர் விக்கிரகம் உள்ளது. பெருமாளுக்கு உற்சவர் விக்கிரகம் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை நாச்சியாரின் ஜென்ம நட்சத்திரமான பங்குனி ஆயில்யத்தன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உறையூர் நாச்சியாருடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு சேர்த்தி சேவையில் காட்சியளிப்பார்.

    இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காகநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டு காவிரியாற்றை கடந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணிக்கு உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன உபய மண்டபத்தை சென்றடைவார். அங்கிருந்து புறப்பட்டு நாச்சியார் கோவில் முன்மண்டபத்தை பிற்பகல் 12 மணிக்கு சென்றடைவார்.

    பின்னர் முன்மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபத்திற்கு பிற்பகல் 1.15 மணிக்கு சென்றடைவார். நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை பகல் 2 மணி முதல் இரவு 12 மணிவரை நடைபெறுகிறது. பின்னர் சேர்த்தி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

    5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறையே நடைபெறும் நம்பெருமாள் -ரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. 6-ந்தேதி பங்குனித்தேர்த்திருவிழாவும், 7-ந்தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 3-ந்தேதி கண்ணாடி அறை சேருதல் நடக்கிறது.
    • சேர்த்தி சேவை நிகழ்ச்சி இரவு 12 மணி வரை நடைபெறுகிறது.

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உற்சவர் நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை சாதிப்பது வழக்கம். அந்த வகையில் சேர்த்தி சேவைக்காக வருகிற 2-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணியளவில் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் வந்தடைகிறார்.

    காலை 11 மணிக்கு மகாஜன உபய மண்டபம் சேருகிறார். பகல் 12 மணிக்கு முன் மண்டபம் சேருகிறார். 1.15 மணிக்கு முன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபம் சேர்ந்து, அங்கு அழகிய மணவாளப் பெருமாளாக காட்சி அளிக்கும் அவர், 2 மணி முதல் தாயாருடன் சேர்த்தி சேவைக்காக எழுந்தருளுகிறார். சேர்த்தி சேவை நிகழ்ச்சி இரவு 12 மணி வரை நடைபெறுகிறது.

    3-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு சேர்த்தி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறை சேருதல் நடக்கிறது.மூலஸ்தான சேவை காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி, பகல் 1.15 மணி முதல் மாலை 5.30 மணி, மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. பூஜா காலம் பகல் 12.30 மணி முதல் 1.15 மணி, மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சேவை இல்லை.

    • இன்று மாலை தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார்.
    • திருமஞ்சனம் நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நாச்சியார் தெப்ப உற்சவம் கண்டருளினார்.

    இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து, இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேர்ந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். அங்கு திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    • இன்று மாலை 5.15 மணிக்கு தாயார் தெப்ப மண்டபம் வந்தடைடுகிறார்.
    • நாளை தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சேர்ந்தடைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைடுகிறார்.

    மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம் அமுது, தீர்த்த கோஷ்டி நடைபெறும். அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நாச்சியார் தெப்பம் கண்டருளுகிறார். இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து, இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார்.

    இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். அங்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    • தெப்ப உற்சவம் 17-ந்தேதி நடக்கிறது.
    • 18-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று முதல் வருகிற 16-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைகிறார்.

    மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம், அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடைபெறும். இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் தாயார் எழுந்தருளி வலம் வருவார். பின்னர் இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார். இதைத்தொடர்ந்து 18-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார்.

    இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • தெப்ப உற்சவம் 17-ந்தேதி நடக்கிறது.
    • 18-ந்தேதி தீர்த்தவாரி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் 16-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சேர்ந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம் அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடக்கிறது. அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்பதேரில் தாயார் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருகிறார். இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார்.

    இதை தொடர்ந்து 18-ந்தேதி தீர்த்தவாரி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதில் மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சேருகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×