வழிபாடு

சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2022-06-22 03:06 GMT   |   Update On 2022-06-22 03:06 GMT
  • தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளின் ஒருவராக சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பால், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.

இதில் தாடிக்கொம்பு, திண்டுக்கல், வடமதுரை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News