வழிபாடு
சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
- மன்னார்குடி அருகே உள்ளது சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்.
- வருகிற 21-ந்தேதி வரை இந்த ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சன்னதியில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெண்களும், குழந்தைகளும் கோலாட்டம் அடித்து பெருமாளை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 21-ந்தேதி வரை இந்த ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.