search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oonjal urchavam"

    • காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபடுவர்.
    • இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. அந்த நாட்களில் வழக்கத்தை விட பெண்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

    மேலும் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த ஆடி மாதம் முழுவதும் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். காலை வேளையில் உற்சவ அம்மனை சிறப்பு அலங்காரத்தில் சன்னதி முன்புள்ள மகா மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்வார்கள். அங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபடுவர். இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து உற்சவ அம்மன் சன்னதிக்குள் எழுந்தருளுவார். மறுநாள் காலை மீண்டும் மகா மண்டபத்துக்கு வருவார். இப்படி அந்த ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது விசேஷமானது ஆகும். ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு கூழ்படைத்து வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் நேர்ச்சை கடன் செலுத்தும் பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவர்.

    இதேபோல நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்.

    • 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது.
    • இன்று முதல் 3-ந்தேதி வரை தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

    பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராகும் ஊஞ்சலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந்தேதி வரை 9 நாட்கள் தினமும் 6 மணிக்கு ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள் ஆகிய 5 சன்னதிகளிலுமாக சுவாமி, அம்பாளுக்கு வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் மற்றும் சிவாச்சாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணத்தின்போதும், ஆவணி மாதத்தில் நடைபெறும் புட்டுத்திருவிழாவின் போதும் உற்சவர், தெய்வானையுடன் கோவிலுக்கு சென்று வருவதால் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தங்கரதம் உலா நடைபெறுவதில்லை. ஆனி ஊஞ்சல் திருவிழாவின்போது கோவிலுக்குள்ளே சுவாமி இருந்த போதிலும் தங்க ரதம் வலம் வரக்கூடிய திருவாச்சி மண்டபத்தில் ஊஞ்சல் அமைக்கப்படுவதால் இன்று முதல் 3-ந்தேதி வரை 10 நாட்கள் தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    • 3-ந்தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் நடக்கிறது
    • 25-ந்தேதி இரவு முதல் 26-ந்தேதி அதிகாலையில் 3 மணியளவில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக" 9 நாட்கள் என வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

    திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

    25-ந் தேதி இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர் சிவகாமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

    ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

    இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள்பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • உற்சவ அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
    • பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஆனி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இள நீர், பன்னீர் ஆகிய வற்றால் அபி ஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்யப் பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணி யளவில் உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக எடுத்துச் செல்லப் பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த படி முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணியள வில் அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்பு அம்மன் கோவிலுக்குள் சென்று உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாது காப்பு பணியில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • பெரியநாயகி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை போல் கிரிவலத்தில் புகழ் பெற்று விளங்கும் கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தோறும் கிரிவலம், ஊஞ்சல் உற்ச வம் ஆகியவை நடந்து வரு கிறது. வைகாசி பவுர்ணமி தினமான நேற்று இரவு கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சாமி, அம்மன், உற்சவர் தனி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் மகாதேவி கிரிவலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் வலம் வந்தனர். தொடர்ந்து மாலை 7 மணி அளவில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெரியநாயகி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகாசி மாத பவுர்ணமி உற்சவதாரர் காடாம்புலியூர் ஏவிகுமரன், ஏவி சுரேஷ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந் துள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந் தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வைகாசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களாலும், எலுமிச்சை மாலைகளாலும் ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டி ருந்தது.

    இரவு 11 மணியளவில் அங்கிருந்த உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டாரவி தேஜா மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 600-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
    • இன்று ஆனந்த சயன கோல லட்சுமி அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசித் திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், மஞ்சள் நீராட்டு உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று காலையில் கொடி இறக்கம் நடந்தது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 10 மணி அளவில் பால், பன்னீர், திருமஞ்சனம் உள்பட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு மாலை 6 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் ஆனந்த சயன கோல லட்சுமி அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • பிப்ரவரி 18-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை மாசிப் பெருவிழா நடைபெற உள்ளது.
    • மாசி மாத அமாவாசையான 19-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ் வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி தை மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவ பெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம் விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகா ரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இரவு 11 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர்.பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி அருள்பாலித்தார்.

    இதைக்கண்ட பக்தர்கள் கற்பூர தீபாரதனைக் காண்பித்தனர். இரவு 12 மணிக்கு அம்மனுக்கு குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்பு அம்மன் உட்பிரகாரத்தில் வலம் வந்தவுடன் நிலையை அடைந்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராம லிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசாரும், மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாம வண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் செய்திருந்தனர்.

    அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் மார்ச் மாதம் 2-ந் தேதி வரை மாசிப் பெருவிழா நடைபெற உள்ளது. ஆகையால் மாசி மாத அமாவாசையான 19-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பதும் அன்றைய தினம் காலையில் மயானக் கொள்ளை விழாவும் இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது.
    • அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல நேற்று மார்கழி திருவாதிரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6.15 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும், அலங்கார தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.

    இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்தார்கள். ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை, தாலாட்டு நிகழ்ச்சி நடந்து.

    இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
    • அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வருகிறது. இதையொட்டி அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6.15 மணிக்கு தீபாராதனையும் 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

    இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சியும், பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • அம்மனும், சிவபெருமானும் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி குங்குமம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு ராஜமாதங்கி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இரவு 11.15 மணிக்கு பம்பை,மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார்.பின்பு பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடினர்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி அங்காளம்மா, ஓம்சக்தி அங்காளம்மா, என கோஷமிட்டு கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து இரவு 12 மணிக்கு தாலாட்டு பாடல் பாடியவுடன் அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டியவுடன்ஊஞ்சல் உற்சவம் முடிவைடைந்தது.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து பம்பை உடுக்கையுடன் சூரிய குளத்தை வலம் வந்து ஊஞ்சலில் வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டது.
    பெரணமல்லூரில் உள்ள அஙகாள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு விழா நடந்தது. பெரணமல்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசையன்று ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதனையொட்டி காலையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் பாம்பு புற்றுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 6 மணி அளவில் பூ கரகம் ஜோடித்தும், சூரிய குளம்படிக்கட்டு் அருகே 16 கைகளுடன் உள்ள காளி தேவதைக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து பம்பை உடுக்கையுடன் சூரிய குளத்தை வலம் வந்து ஊஞ்சலில் வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டது.

    அப்போது பலர் அருள் வந்து ஆடினர். ஏற்கனவே ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் வேண்டிக்கொண்டு சென்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் எடைக்கு எடை காசுகள் வைத்து துலாபாரம் செய்து நேர்த்திக்கடன் செலுதினர். பின்னர் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 12 மணிக்கு பூரணகும்பம் படையல் செய்து அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பெரணமல்லூர், ஆரணி, செய்யாறு, சென்னை, வந்தவாசி திருவண்ணாமலை உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை அமாவாசை விழாக்குழுவினர் செய்தனர்
    ×