வழிபாடு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

Published On 2022-09-13 07:34 GMT   |   Update On 2022-09-13 07:34 GMT
  • இன்று 5001 பொங்கல் வழிபாடு, அன்னதானம் நடக்கிறது.
  • நாளை திருவிளக்கு பூஜை, தங்கரதம் பவனி நடக்கிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, சத்சங்கம், மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையும் நடந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது, 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News