- கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது.
- இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது.
* அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது.
* காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.
* கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணெண் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படியே நடக்க வேண்டும்.
* மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
* கோவிலில் உள்ள திருவிளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது.
* இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது.
* விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக் கூடாது.
* சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல், சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது.
* ஸ்தூபி, கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
* பிறர் வீட்டில் அன்னம் புசித்த அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.
* கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பெரிருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக் கூடாது.
* வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.
* மரணத்தீட்டு உள்ளவர்களையோ தீட்டு உள்ளவர்களோ அல்லது அத்தீட்டு உடையவரைத் தொட்டபின் குளிக்காமலோ கோவிலுக்குச் செல்லக் கூடாது.
* கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது.