வழிபாடு

செனாய்நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 11-ந்தேதி கும்பாபிஷேகம்

Published On 2022-07-09 07:54 GMT   |   Update On 2022-07-09 07:54 GMT
  • நாளை முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
  • 11-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

சென்னை செனாய்நகர் சுப்புராயன் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி நாளை (10-ந்தேதி) விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகாசங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை ஆகியவை நடக்கிறது.

11-ந்தேதி காலையில் 2-ம் கால யாக பூஜை நடக்கிறது. பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் எடுத்துச்செல்லப்படுகிறது.

காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

Tags:    

Similar News