வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தியில் கவுரிதேவியம்மன் உற்சவம்

ஸ்ரீகாளஹஸ்தியில் கவுரிதேவியம்மன் உற்சவம்

Published On 2021-12-17 07:32 GMT   |   Update On 2021-12-17 07:32 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கவுரிதேவியம்மன் உற்சவத்தை முன்னிட்டு கவுரிதேவியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 6.12.2021-ந்தேதியில் இருந்து வருகிற 15.1.2022-ந்தேதி வரை கவுரிதேவியம்மன் உற்சவம் நடந்து வருகிறது.

அதன்படி நேற்று காலை கொப்பி உற்சவம் நடந்தது. உற்சவர் கவுரிதேவியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் கவுரிதேவியம்மனை வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News