வழிபாடு
தாமரைமொழி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

தாமரைமொழி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Published On 2021-12-08 04:28 GMT   |   Update On 2021-12-08 04:28 GMT
சாத்தான்குளம் தாமரைமொழி சந்தனமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு சுற்று வட்டார பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
சாத்தான்குளம் அருகே தாமரைமொழி சந்தனமாரியம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இதையடுத்து சந்தனமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து கோபுர கலசம், சந்தன மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்கார பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு சுற்று வட்டார பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News