search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்கு பூஜை"

    • விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணை விளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
    • விளக்குகளை நன்றாகக் கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்க வேண்டும்.

    * விளக்குகளை நன்றாகக் கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்க வேண்டும்.

    உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.

    * ஏற்றிய பின்பு அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.

    * சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.

    * எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.

    * வீடுகளில் பூஜை செய்யும் போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

    * விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணை விளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.

    * பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும்.

    ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.

    • கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு, வைகுண்ட தர்மபதியில் வைகுண்டர் ஒளி வெள்ளத்தில் எழுந்தருளினார்.
    • அய்யா, குதிரை வாகனத்தில் பதிவலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

    திருவொற்றியூர்:

    சென்னை, மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவில் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா வைகுண்டர் பதிவலம் வந்தார். தினமும் திருஏடு வாசிக்கப்பட்டது. 8-ம் நாளான, நேற்று இரவு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக, திருக்கல்யாண சுருள் மற்றும் லட்டு, அதிரசம், பனியாரம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, பக்தர்கள் செண்டை மேளம் முழங்க, ஊர்வலமாக எடுத்து கொண்டு பதிவலம் வந்து அய்யா வைகுண்டர் முன்பு படையலிட்டனர். சன்னதியின் வாயிலில் இருக்கும் பிரமாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு, வைகுண்ட தர்மபதியில் வைகுண்டர் ஒளி வெள்ளத்தில் எழுந்தருளினார்.

    கோவில் வளாகத்தில், 1008-க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து, விளக்குகள் ஏற்றி, திருக்கல்யாண ஏடு வாசிப்பை உச்சரித்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அய்யா, குதிரை வாகனத்தில் பதிவலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (15-ந்தேதி) காலை நடக்கிறது. காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார். தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமிநாதன், பொருளாளர். பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செய லாளர் கே.ராமமூர்த்தி மற்றும் நிர்வா கிகள் செய்து வருகிறார்கள்.

    • சிறப்பு ஹோமம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் காவிரிக்கரை செட்டிப்ப டித்துறை விஸ்வநாதர் கோவில் நிர்வாகக்குழு சார்பில் காவிரிக்கு நன்றி தெரிவித்து வழிபடும் 75-ம் ஆண்டு காவிரி பொங்கல் விழா கும்பகோணம் ராசராசேந்திரன் பேட்டை காவிரி படித்துறையில் நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவில் விருத்தாம்பாள் சந்திரமோகன் அனைவரையும் வரவேற்றார்.

    ஆனந்தி தமிழழகன், கஸ்தூரி முருகன், உமாமகேஸ்வரி பாலசுப்பிரமணியன், லதா முருகன் மற்றும் ராஜகுமாரி சுந்தரமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

    சிறப்பு விருந்தினராக கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    பார்த்தசாரதி, வந்தனா சிதம்பரநாதன் மற்றும் கும்பகோணம் மாநகர் நல அலுவலர் பிரேமா சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் சாவித்திரி செல்வ கணபதி நன்றி கூறினார்.

    தொடர்ந்து, கட ஸ்தாபனம், சிறப்பு ஹோமம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், கடம் புறப்பட்டு காவிரி நதிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், காவிரி அன்னைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், காவிரியில் துணை மேயர் தமிழழகன் மற்றும் ஆனந்தி தமிழழகன் ஆகியோர் தீபத்தை மிதக்க விட்டனர்.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி அன்னையை வணங்கி வழிபட்டனர்.

    முன்னதாக விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குடும்ப மேன்மைக்காக விளக்கேற்றி மங்கள பொருட்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் கொண்டு மேளதாளம் முழங்க அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    முடிவில் விளக்கிற்கு மங்கள ஆர்த்தி செய்தனர்.

    • ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
    • மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

    கடலூர்:

    திருச்சி மாவட்டம், தொட்டி யம்வட்டம் நாகைய நல்லூர் கிராமம் மேய்க்கல் நாயக்கன் பட்டி பதி னெட்டாம் படி கருப்பசாமி கோவிலில் உலக நன்மை வேண்டிவந்தாரை வாழ வைக்கும் வரம்தரும் பதினெட்டாம்படி கருப்ப சாமிகோவிலில் தெய்வஅருளை பெற்ற இளஞ் சித்தர், ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜைநடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும்நேர்த்தி கடனுக்காக வும் விளக்கேற்றி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைபதி னெட்டாம்படி கருப்பசாமி வழிபாட்டு மன்றத்தினர், விழாகுழுவினர், கிராம மக்கள் ஆகியோருடன் பண்ருட்டி, ஆரணி பி.கே.மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு செடல் பெருவிழாவும் நடந்தது.
    • வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாவாடை ராயனுக்கு படையல் பூைஜயும் நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று (12-ந் தேதி) விநாயகர் பூைஜயுடன் தொடங்கியது. இன்று காலை 6 மணிக்கு புத்துமாரியம்மனுக்கு புனிதநீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு செடல் பெருவிழாவும் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (14-ந் தேதி) மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாவாடை ராயனுக்கு படையல் பூைஜயும் நடைபெறுகிறது.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருப்பூண்டி அடுத்த கீழையூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் முறைப்படி திருமறை மந்திரங்கள் ஓத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ஏராளமான சுமங்கலி பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
    • உலக நலன் வேண்டி விளக்கு பூஜை நடந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை யொட்டி உலக நலன் வேண்டியும், நாடு செழிக்கவும், உலக அமைதி நிலவவும், உலக மக்கள் அனைவரும் உயர்ந்த ஞானம், உயர்ந்த அறிவு, சந்தோசம் பெற வேண்டி விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் கிராமத்தில் அமைந்துள்ள பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் பெண்கள் 501 திருவிளக்கேற்றி மகாலட்சுமி பூஜை, திருவிளக்கு பூஜை, மஞ்சள் பூஜை, குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து பூஜைகள் செய்தனர்.

    உலக மக்கள் அமைதி வேண்டியும், மாணவர்கள் கல்வி செல்வம் பெருகவும், மாதம் மும்மாரி மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடி இன்றி நலமுடன் வாழவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையின் போது புரோகிதர்கள் பக்தி பாடல் பாடிய போது திருமணமான பெண்கள், இளம் பெண்கள் அருள் வந்து பக்தி பரவசத்துடன் ஆடினர். அவர்களை உறவினர்கள், கோவில் பூசாரிகள், திருநீர், எலுமிச்சம்பழம் கொடுத்து அமைதிபடுத்தினர். இந்த பூஜையில் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்ட னர்.
    • கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஆடி மாத 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்ட னர். மேலும் பலர் குண்டம் வளர்க்கப்பட்ட இடத்தில் உப்பு, பிளகு மற்றும் மஞ்சள், குங்குமம் போட்டு அம்மனை வழிபட்டனர்.

    அந்தியூருக்கு காவல் தெய்வமாக விளங்கும் பத்ரகாளியம்மன் வழிபட்டு சென்றால் அனைத்து செயல்களும் நன்மையில் முடியும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் தொடங்கியது முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    இதில் குறிப்பாக ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு காய், கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் இன்று மாலை விஷ்ணு துர்க்கை வழிபாட்டு குழுவினர்விளக்கு பூஜை நடைபெறு உள்ளது..

    பு.புளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் உள்ள மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை கோவிலில் விளக்கு பூஜை நடக்கிறது.

    இதே போல்ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் மணிக்கூண்டு கொங்காலம்மன் கோவிலில் காலை வியாபாரிகள் மற்றும் பெண்கள், பக்தர்கள் என பலர் வந்து அம்மனை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அங்காரம் செய்ய ப்பட்ட சிறப்பு அங்காரம் செய்யபப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து கோவிலில் பெண் பக்தர்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல்கள் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் ஈரோடு காரை வாய்க் கால் மாரியம்மன், கருங்கல் பாளையம் சின்ன மாரிய ம்மன், சூரம்பட்டி மாரி யம்மன், பார்க் ரோடு எல்லை மாரிய ம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகபட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூரத்தாங்குடி கிராமத்தில் சிவா விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூரில் எமனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க எமன் லிங்கம் பிடித்து வழிபட்ட ஸ்தலம் என்பது இதன் சிறப்பு.

    இக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தாயார் ஸ்ரீ குங்குமவள்ளி அம்மனுக்கு 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு வளையல் அணி விக்கப்பட்டு விளக்கு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் ரோடு மாரியம்மன், மற்றும் பிளாக் மாரியம்மன் கோவி லில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அணி விக்கப்பட்டு விளக்கு பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரிய ம்மனுக்கு பால், தயிர், திரு மஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் செய்ய ப்பட்டது.

    இதைத்தொட ர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து விளக்கு பூஜையை தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட தாலி கயிறு, வளையல்கள். பக்தர்களுக்கு வழங்கினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்ப ட்டது.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி சருகு மாரியம்மன் கோவிலில் ஆடி பூரத்தை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்து தீபாரா தனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு விளக்கு பூஜை தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட தாலி சரடு. வளையல்கள். பக்தர்களுக்கு வழங்கினர் இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு 108 மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×