என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரணி ஐயப்பன் கோவிலில் 5-ம் ஆண்டு விளக்கு பூஜை: சுவாமி திருவீதி உலா
- மதியம் உச்சிக்கால பூஜை, நெய்வேத்திய பிரசாதம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாலையில் மலர் பூஜை, மகா தீபாராதனை, ஐயப்ப பஜனை, இரவு அன்னதானம் நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பிஞ்சலார் தெருவில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் 5-ம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், மூலவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், பக்தர்களுக்கு நெய்வேத்திய பிரசாதம், கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் உச்சிக்கால பூஜை, நெய்வேத்திய பிரசாதம், அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில் மலர் பூஜை, மகா தீபாராதனை, ஐயப்ப பஜனை, இரவு அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, வாண வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது விரதம் இருந்த மாளிகைமார்கள் விளக்குகளை தட்டில் ஏந்திய வண்ணம் உலா வந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்