ஆன்மிகம்
கொடியேற்ற விழா நடைபெற்ற போது எடுத்த படம்

வரதய்யங்கார்பாளையம் அய்யா வைகுண்டர் சிவபதி தேர்த்திருவிழா கொடியேற்றம்

Published On 2021-09-18 05:08 GMT   |   Update On 2021-09-18 05:08 GMT
கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் வரதய்யங்கார்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சிவபதியில் தேர்த்திருவிழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் வரதய்யங்கார்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சிவபதியில் தேர்த்திருவிழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி கோவிலில் நேற்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பணிவிடைகளுடன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு உகப்படிப்பும், அய்யா வைகுண்டரை தொட்டில் வாகனத்தில் எழுந்தருளச் செய்து பதிவலம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்கார பணிவிடை, அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாட்டையும் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர் இந்த கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் வி.ஆர். வேலுமயில் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 அன்ன வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் நிகழ்ச்சியும், 20- ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்திலும், 22- ந் தேதி நாக வாகனத்திலும், 23-ந் தேதி கருட வாகனத்திலும், 24- ந் தேதி வெள்ளை குதிரை வாகனத்திலும், 25-ந் தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும், 26-ந் தேதி இந்திர வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து 27- ந் தேதி மதியம் 1 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனம் ஏறி திருத்தேர் பிரவேசித்தலும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News