ஆன்மிகம்
விநோத உடையில் வந்த பக்தர்கள்

அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழாவில் விநோத உடையில் வந்த பக்தர்கள்

Published On 2021-09-17 04:04 GMT   |   Update On 2021-09-17 04:04 GMT
தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற்றவுடன் திருவிழாவின் போது சாக்கு உடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவிலில் ஆவணி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள் சாக்கில் ஆடை தைத்து விநோத உடை அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற்றவுடன் திருவிழாவின் போது சாக்கு உடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News