ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

கடலூர் புதுவண்டிப்பாளையம் சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-09-08 05:55 GMT   |   Update On 2021-09-08 05:55 GMT
கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் புதிதாக சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் புதிதாக சர்வசக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. பின்னர் நவக்கிரக ஹோமம், அங்குரார்ப்பணம், பிரவேச பலி, யாக சாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.

அதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, 9 மணிக்கு நாடி சந்தானம், கோதர்சணம், யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு கோவில் கோபுர கலசங்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News