ஆன்மிகம்
மணல்விளை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
பேய்க்குளம் அருகே உள்ள மணல்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி அம்பாளை பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனர்.
பேய்க்குளம் அருகே உள்ள மணல்விளை முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது. விழாவையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து அன்னையர் முன்னணி சார்பில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
விழாவில் அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள், சுற்று வட்டார பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி அம்பாளை பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் முருகேசன், கருங்குளம் ஒன்றிய செயலர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள், சுற்று வட்டார பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி அம்பாளை பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் முருகேசன், கருங்குளம் ஒன்றிய செயலர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.