ஆன்மிகம்
நந்தனார் சுவாமி

சிதம்பரம் நந்தனார் சுவாமிக்கு சிறப்பு பூஜை

Published On 2021-07-17 05:08 GMT   |   Update On 2021-07-17 05:08 GMT
63 நாயன்மார்களில் ஒருவரும் திருநாளைப்போவார் என அழைக்கப்படும் ஸ்ரீ நந்தனார் சுவாமிக்கு ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி நந்தனார் கல்விக் கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிதம்பரம் ஓமகுளம் பகுதியில் நந்தனார் மடத்தில் அமைந்துள்ள 63 நாயன்மார்களில் ஒருவரும் திருநாளைப்போவார் என அழைக்கப்படும் ஸ்ரீ நந்தனார் சுவாமிக்கு ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி நந்தனார் கல்விக் கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக நந்தனார் கல்விக்கழக தலைவர் டாக்டர் சங்கரன் தலைமையில் டிரஸ்ட் செயலாளர் பி.கே.எம்.வினோபா, கல்விக்கழக செயலாளர் அன்பழகன், துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், ஆலோசகர் பேராசிரியர் தெய்வநாயகம், பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், வக்கீல் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையில் நந்தனார் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் நந்தனார் சுவாமி பல்லக்கில் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதில் கல்விக்கழக நிர்வாகிகள் நாகராணி செல்வம், மணிவேல், விமல் குமார் இளையராஜா, குழந்தைவேல், பழனிவேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News