ஆன்மிகம்
மாணிக்கவாசகர்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை

Published On 2021-07-17 02:08 GMT   |   Update On 2021-07-17 02:08 GMT
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை, நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாணிக்கவாசகர் குருபூஜை, நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன் மற்றும் நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகாதீபாராதனையுடன் குரு பூஜை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News