ஆன்மிகம்
வராஹி அம்மன்

திருவையாறு அருகே வராஹி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

Published On 2021-07-12 08:47 GMT   |   Update On 2021-07-12 08:47 GMT
திருவையாறை வியாக்கிர புரீஸ்வரர் கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவையாறை அடுத்த பெரும்புலியூர் கிராமத்தில் வியாக்கிர புரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா நடைபெற்றது.

விழாவில் வராஹி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், தேன், மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது.
Tags:    

Similar News