ஆன்மிகம்
பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேரோட்டம்
பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பாண்டவர்கள் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பாண்டவர்கள் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் பாண்டமங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு கெஜலட்சுமி வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பயாகமும், 25-ந் தேதி இரவு 7 மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திருத்தேர் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு கெஜலட்சுமி வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பயாகமும், 25-ந் தேதி இரவு 7 மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திருத்தேர் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.