ஆன்மிகம்
அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

Published On 2020-12-19 04:53 GMT   |   Update On 2020-12-19 04:53 GMT
அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு உள் பிரகாரத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து வாண வேடிக்கையும் ஐயப்ப சுவாமி புறப்பாடு நடந்தது.
அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மார்கழி மாத திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலையில் மங்கள இசை நிகழ்ச்சி, சுவாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், தேன், புஷ்பம், தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

2-ம் நாள் கோவில் உள் பிரகாரத்தில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. 3-ம் நாள் கணபதி ஹோமம், லெட்சுமி பூஜை, கோ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. அன்று மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாண வேடிக்கையும் ஐயப்ப சுவாமி புறப்பாடு நடந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன், ஐயப்ப, முருக பக்தர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News