ஆன்மிகம்
மருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

மருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2020-11-19 05:41 GMT   |   Update On 2020-11-19 05:41 GMT
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரோதைய ஈஸ்வரமுடையார் மருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரோதைய ஈஸ்வரமுடையார் மருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் குருப்பெயர்ச்சி விழா நேற்று காலை நடந்தது. சோழவந்தான் பிரசாந்த் சர்மா தலைமையில் பரிகார யாக பூஜை நடந்தது. பின்னர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. யாக பூஜையில் வைத்த புனித நீரால் அபிஷேகம் நடந்தது. கருத்தப்பாண்டி பூசாரி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி சங்காபிஷேகம் சிவபெருமானுக்கு நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய வழிபாட்டு குழு மற்றும் பிரதோச கமிட்டியினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News