ஆன்மிகம்
முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
கடுக்கரை அருகே உள்ள நயினார் தோப்பில் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட் கிழமை) நடக்கிறது.
கடுக்கரை அருகே உள்ள நயினார் தோப்பில் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட் கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு பூஜை, கணபதி ஹோமம், காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கும்பம் எடுத்து வருதல், அம்பாள் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.
தொடர்ந்து அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.