ஆன்மிகம்
பெரிய அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை

பெரிய அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை

Published On 2020-10-09 04:39 GMT   |   Update On 2020-10-09 04:39 GMT
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி பெரியஅம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை, இரவில் அம்மன் சப்பரம் வீதி உலா நடைபெற்றது
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி பெரிய அம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் சிறப்பு அன்னதானம், 2-வது நாள் மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவில் அம்மன் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.

3-வது நாள் குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜையும், தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். கடைசி நாள் மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News