ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் இன்று பிரதோஷ விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதோஷத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெறும் அபிஷேகம், பிரதோஷ தீபாராதனை மற்றும் பிரதோஷ சுற்றில் கலந்து கொள்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி முதல் பிரதோஷ விழா நடைபெறுகிறது. கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெறும் அபிஷேகம், பிரதோஷ தீபாராதனை மற்றும் பிரதோஷ சுற்றில் கலந்து கொள்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
பக்தர்கள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள வரிசை அமைப்பில் சமூக இடைவெளியுடன் நின்று, பிரதோஷ தீபாராதனை முடிந்த பிறகு சன்னதிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். எனவே பக்தர்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பக்தர்கள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள வரிசை அமைப்பில் சமூக இடைவெளியுடன் நின்று, பிரதோஷ தீபாராதனை முடிந்த பிறகு சன்னதிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். எனவே பக்தர்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.