ஆன்மிகம்
மகாலட்சுமி

மகாலட்சுமியின் அருளை பெற இவையெல்லாம் கூடாது

Published On 2020-09-25 06:58 GMT   |   Update On 2020-09-25 06:58 GMT
இந்த விஷயங்களை செய்தால் மகாலட்சுமி கண்டிப்பாக உங்கள் வீட்டில் தங்க மாட்டாள். எந்த விஷயங்களை செய்தால் மகாலட்சுமியின் அருளை பெற முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.
காலையும் மாலையும் தூங்குபவர்கள், காரணமின்றி அழுபவர்கள், சுத்தமில்லாதவர்கள், சுடுசொல் பேசுபவர்கள் போன்றோர் திருமகளை விரட்டியடிக்கும் கெடு மதியாளர்கள்.

இரவில் தயிர் சோறு உண்ணக்கூடாது, விளக்கு வைத்து உப்பு கொடுக்ககூடாது, தலைவிரி கோலமாய் இருத்தல் கூடாது.

வசை சொற்கள் கூறுதல் கூடாது, பூமியை தட்டி சப்தமெழுப்ப கூடாது, வில்வம்,தும்பை,தாமரை தலையில் சூடக்கூடாது, அன்னம் வீணாக்க கூடாது, அழுக்கான உடை அணிதல் கூடாது. இப்படியெல்லாம் இருந்தால் மகாலட்சுமி அருளை பெறலாம்.
Tags:    

Similar News